Thursday, October 17, 2013

புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி


புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி



அனைவருக்கும் பழனி கோவில் தெரியும் அந்த மலை அடிவாரத்தில்தான் புலிப்பாணி சித்தரின் ஜீவசாமதி இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். மலைக்குமேல் வீற்றிருக்கும் தண்டாயுதபானி என்ற மூலிகை சிலையை உருவாக்கியவர் போகர்.
அந்த சிலை உருவாக பெரும் உதவியாக இருந்தவர்கள் புலிப்பாணி மற்றும் கோரக்க சித்தர். பழனிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் இந்த ஜிவசாமாதியை பார்த்துவிட்டு வருவது மிகவும் நல்லது. பழனி மலை ஏறும் இடத்திலிருந்து இடது புறமாக ஒரு 15ந்து கடை தள்ளி புலிப்பாணி சித்தரின் ஜீவசாமாதி அமைந்துள்ளது.
இந்த தண்டாயுதபாணி சிலையை போகரின் கடைசி காலக்கட்டதில் செய்யப்பட்டது (அதாவது போகர் ஜீவசமாதி ஆவதற்கு சிறுதுகாலம் முன்) போகருக்கு 80 சீடர்கள் இருந்ததாகவும் அவர்கள் தண்டாயுதபாணி சிலையை வடிவமைக்க உதவியதாகவும் சொல்லப்படுகிறது அதில் பிரதான சீடர்கள் புலிப்பாணி மற்றும் கோரக்கர்.
சிலை செய்தபிறகு, போகர் தான் ஜீவசமாதி அடைபோவாதாக கூறி புலிப்பாணிக்கு பழனி தண்டாயுதபாணியை பராமரிக்கும் பொருப்பையும், கோரக்கரை வடக்குப்பொய்கைநல்லூரில் ஜீவசமாதி அடையுமாறு கேட்டுக்கொண்டார். இந்த விவரங்களை சந்திரேகை என்ற நூலில் கோரக்கர் விவரமாக கூறியிருக்கிறார். அதை இனிவரும் பதிவிகளில் எழுத முயற்ச்சிக்கிறேன்.

No comments:

Post a Comment